பரிஸ் - 1.5 கிலோ கஞ்சாவுடன் நபர் கைது! - மூவர் விசாரணையின் கீழ்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  1.5 கிலோ கஞ்சாவுடன் நபர் கைது!  மூவர் விசாரணையின் கீழ்!!

பரிசில் போதை மருந்து விற்பனை முகவர் ஒருவர் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. பரிஸ் boulevard de la Chapelle மற்றும் rue de la Goutte-d'Or பகுதிகளுக்கிடையே  rue de la Charbonniere இணையும் பகுதியில் வைத்து நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவரிடம் இருந்து 1.4 கிலோ எடைகொண்ட கஞ்சா  பொதியும், €10,000 ரொக்கப்பணமும் மீட்கபட்டுள்ளது. குறித்த நார் நீண்ட நாட்களாக இப்பகுதியில் கஞ்சா விற்பனை முகவராக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, இவரிடம் இருந்து கத்தி, சிறிய இரும்புக்கம்பி, அடிமட்டம் போன்ற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து குறித்த நபரின் வீட்டினைச் சோதனையிட்ட காவல்துறையினர், அவரின் சகோதரி உட்பட மற்றுமொரு நபரையும் கைது செய்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை வரை அவர்கள் தொடர்ந்தும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர். 

மூலக்கதை