பெங்களூரு சிறை திரும்பினார் இளவரசி

தினகரன்  தினகரன்
பெங்களூரு சிறை திரும்பினார் இளவரசி

பெங்களூரு,: பதினைந்து நாள் பரோலில் சென்றிருந்த இளவரசி, நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரும்பினார்.சொத்து  குவிப்பு வழக்கில் கைதான சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன  அக்ரஹாரா சிறையில் தண்டனை கைதிகளுக்கான அறையில் சிறைவாசம் அனுபவித்து  வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இளரவசியின் சகோதரருக்கு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக  அவருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அவர் பரோலுக்கு விண்ணப்பித்தார். இதை ஏற்ற சிறைத்துறை எஸ்.பி., 15 நாள் பரோல் வழங்கினார். சிறையில் இருந்து கடந்த மாதம் 25ம் தேதி வெளியே வந்த இளவரசி தமிழகம் சென்றார். இந்நிலையில் 15  நாள் பரோல் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர் சிறைக்கு திரும்பினார்.

மூலக்கதை