ஆந்திர மாநிலதில் ரவுடிகளுக்கு இடையே மோதல் : இதயத்தை தோண்டி கொடூரம்
கர்னூல் : ஆந்திர மாநிலம் கர்னூலில் ரவுடியை கொன்று இதயத்தை தோண்டி எடுத்த கொடூரத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சென்னையா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.