உரிமம் இல்லாத ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு மட்டுமே தடை: உயர்நீதிமன்றம் விளக்கம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

உரிமம் இல்லாத ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதித்து உள்ளதாகவும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் பயப்படத் தேவை இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்து உள்ளது. 

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். 

இதனால், உரிமம் பெற்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், தாங்கள் மருந்துப் பொருட்களை வாங்கி விற்பனை மட்டுமே செய்வதாகவும் கூறி, தங்களையும் இந்த வழக்கில் ஒரு தரப்பு வாதியாக சேர்க்க வேண்டுமென டிஎன்மெட்ஸ்.காம் என்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. உரிமம் பெற்ற  நிறுவனங்கள் பயப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

மூலக்கதை