சிறு குறு நடுத்தர தொழிற்கடன் 59 நிமிடத்தில் வழங்கும் திட்டம்: காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சிறு, குறு , நடுத்தர தொழில்களுக்கான கடன் திட்டங்களை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை மந்திரி  கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

"சிறு, குறு , நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க விண்ணப்பதாரருக்கு 59 நிமிடத்தில் கடன் வழங்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1 கோடி வரை கடன் அளித்து வங்கிகள் விரைவாக செயல்பட வேண்டும்.

சிறு, குறு , நடுத்தர தொழில்களுக்கான கடன் திட்டம் மூலம் இதுவரை 778 பேருக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது. சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தொழில் துவங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் 50 இடங்களில் ஒன்றாக வரும் நாள் வெகுதூரம் இல்லை.'
இவ்வாறு அவர் பேசினார்.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 நாட்கள் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை