தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து 8 சிறப்பு ரயில்கள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தீபாவளியை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து  8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தகவல் தெரிவித்து உள்ளது.

தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு நவ.3, 5 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு நவ. 4,7 ஆகிய தேதிகளில் காலை 9.30-க்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து கோவைக்கு காலை 7.45 மணிக்கு நவ. 3,5 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து நவ. 4,7 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது. 

நெல்லை - தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் மதுரை, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் வழியாக நவ 5 மற்றும் 7-ம் தேதிகளில் காலை 7:10க்கு நெல்லையில் புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது. 

மூலக்கதை