தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

வனத்தோட்டம், ரப்பர், தேயிலை தோட்ட கழகத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளார். 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழ்நாடு வனத்துறையின் கீழ் இயங்கும்  தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை வழங்க உத்தரவிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். 

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை