ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோவாவை வென்றது ஜாம்ஷெட்பூர்
ஜாம்ஷெட்பூர்: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், கோவா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ. எஸ். எல். ) கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஜாம்ஷெட்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஜாம்ஷெட்பூர் மற்றும் கோவா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே ஜாம்ஷெட்பூர் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் மைக்கேல் சூசைராஜ் முதல் கோல் அடித்தார்.
இந்நிலையில், 33வது நிமிடத்தில் கோவா அணியின் மூர்ததா பால் கோல் அடித்து அசத்தினார்.
முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. 2வது பாதியில், ஜாம்ஜெட்பூர் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அந்த அணியின் மைக்கேல் சூசைராஜ் மீண்டும் கோல் அடித்தார். இதைதொடர்ந்து, மெமோ 77வது நிமிடத்திலும், சுமித் பாசி 78வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.
ஆட்டத்தின் முடிவில், ஜாம்ஷெட்பூர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் கோவா 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
இன்று புனேயில் நடைபெறும் போட்டியில் புனே, கேரளா அணிகள் மோதுகின்றன.
.