புரோ கபடி போட்டி குஜராத் அணி அபார வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி போட்டி குஜராத் அணி அபார வெற்றி

பாட்னா: புரோ கபடி போட்டியில், புனே அணியை 37-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்றது. புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், 12 அணிகள் மோதுகின்றன.

பாட்னாவில் நேற்று நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில் புனே மற்றும் குஜராத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முதல் பாதியில் 16-12 என்ற கணக்கில் குஜராத் முன்னிலை பெற்றது.

புனே அணியினர் ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். ஆட்டத்தின் இறுதியில், 37-27 என்ற புள்ளி கணக்கில் புனேயை வீழ்த்தியது குஜராத்.

இது இந்த அணியின் 3வது வெற்றியாகும். புனே அணி 5 ஆட்டங்களில் தோற்றுள்ளது.

புனே அணியின் நட்சத்திர வீரர் நிதின் தோமர், இந்த சீசனில் 100 புள்ளிகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

தெலுங்கு அணி வெற்றி:  பாட்னா மற்றும் தெலுங்கு அணிகள் இடையே நடந்த மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு அணி 53-32 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னாவை வென்றது.

இது தெலுங்கு அணிக்கு கிடைத்த 4வது வெற்றியாகும்.

தெலுங்கு அணியின் முக்கிய வீரரான ராகுல் சவுத்ரி 17 புள்ளிகள் எடுத்தார்.   இன்று நடைபெறும் போட்டிகளில், டெல்லி-புனே அணிகள், பாட்னா-பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.


.

மூலக்கதை