வீரர்களுக்கு இந்திய உணவு வகைகள்: விராட் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீரர்களுக்கு இந்திய உணவு வகைகள்: விராட் வலியுறுத்தல்

புதுடெல்லி: உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழைப்பழம் அவசியம் வழங்க வேண்டும் என விராட் கோஹ்லி வலியுறுத்தியுள்ளார். உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் அடுத்தாண்டு மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது.

ஜூலை 14ம் தேதி வரை மொத்தம் 48 போட்டிகள் நடக்கின்றன. உலகக்கோப்பை போட்டியின்போது வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்துதர வேண்டும் என கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவிடம் கேப்டன் விராட்  தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

உலகக்கோப்பை போட்டிகளுக்கு இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்லுபோது, வீரர்களுக்கு என தனியாக முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டி அவசியம் என கூறியுள்ளார். மேலும், வீரர்கள் தங்களின் மனைவி, கேர்ள்பிரண்ட் ஆகியோரை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

இந்திய உணவு வகைகள், பழங்கள் வழங்க வேண்டும். குறிப்பாக, களத்தில் உடனடியாக புத்துணர்ச்சி அளிக்க கூடிய வாழைப்பழம் வழங்க வேண்டும் என விராட் வலியுறுத்தியுள்ளார்.

 


.

மூலக்கதை