இரகசியத்தை வெளிப்படுத்திய கோஹ்லி!

PARIS TAMIL  PARIS TAMIL
இரகசியத்தை வெளிப்படுத்திய கோஹ்லி!

அணி மோசமான நிலையில் உள்ள போது கடினமாக பாடுபடுவதும் மேலும் 10 12 ஓவர்கள் விளையாட முயல்வதுமே பத்தாயிரம் ஓட்டங்களை குவித்தமைக்கான காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 
அணிக்காக அவ்வாறு விளையாடும் போது ஓட்டங்கள் தானாகவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வளவு காலமும் விளையாட முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் இன்னமும் பல வருட காலம் விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
பிசிசிஐ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
எனது தேசத்திற்காக விளையாடுவது என்பது மிகவும் பெருமைக்குரிய விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் பத்து வருடங்கள் விளையாடிய பின்னரும் நான் எதற்கும் உரிமையானவன்  என கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
பத்து வருடத்திற்கு பின்னரும் ஒவ்வொரு ஓட்டத்திற்காகவும் கடினமாக பாடுபடவேண்டியுள்ளது எனவும் விராட் கோலி பிசிசி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
 
இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்ற தீவிர வேட்கையுடன் பலர் உள்ளனர் என குறிப்பிட்டுள்ள விராட்கோலி இதன் காரணமாக இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்போது உங்களிடமும் அந்த வேட்கை இருக்கவேண்டும் எதனையும் நீங்கள் சாதாரணமாக எடுத்துவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
 
அர்ப்பணிப்பு என்பது அணிக்கு எதுதேவையோ அதனை உண்மையாகவே செய்வது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனது அணிக்காக ஒரு ஓவரில் ஆறு தடவைகள் பந்தை விழுந்து தடுக்கவேண்டும் என்றால் அதனை நான் செய்வேன் எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்.
 
அதுவே எனது  கடமை தெரிவுக்குழுவினர் அதற்காகவே என்னை இந்தியாவிற்கு விளையாடுவதற்கான தெரிவுசெய்துள்ளனர் எனவும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
 
இது  எனது எவருக்கும் நன்மையை செய்வதில்லை,நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன் என்பதை எவருக்கும் வெளிப்படுத்தும் விடயமுமல்ல,மாறாக வெறுமனே அணிக்கு ஒரு ஓட்டத்தை பெற்றுக்கொடுக்கும் விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டிற்காக விளையாடும் போது தீவிரமாக விளையாடும் அணுகுமுறையை கைவிட முடியாது எனவும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
 
நான் களைப்படைந்துவிட்டேன் என்னால் முடியாது என கருதுவதை விட அணிக்காக மேலும் ஒரு ஓட்டத்தை  பெற்றுக்கொடுக்கவேண்டும் என  சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள விராட்கோலி அதுவே எப்போதும் எனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
 
அணிக்கு என்ன அவசியமோ அதனை நான் எப்போதும் செய்வேன்  அணிக்கு எந்த வகையிலாவது உதவுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அணிக்கு என்ன அவசியமோ அதற்காக எனது உடல் மற்றும் உள திறமையை நான் பயன்படுத்துகின்றேன்,இதன் காரணமாக நான் அதிக ஓட்டங்களை பெற்றுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எனது துடுப்பாட்டம் குறித்து மாத்திரம் சிந்தித்திருந்தால் இவ்வளவு ஓட்டங்களை பெற்றிருக்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அணி மோசமான நிலையில் உள்ள போது கடினமாக பாடுபடுவதும் மேலும் 10 12 ஓவர்கள் விளையாட முயல்வதுமே பத்தாயிரம் ஓட்டங்களை குவித்தமைக்கான காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
அணிக்காக அவ்வாறு விளையாடும் போது ஓட்டங்கள் தானாகவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

மூலக்கதை