ஆடையில் தீவைத்து எரியவிட்டு புதுப் பெண்கள் நிகழ்த்திய சாகசம் கண்டு அனைவரும் அதிர்ச்சி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

அமெரிக்காவில் திருமணமானபுதுப்பெண்கள் ஆடையில் தீவைத்து எரியச் செய்த சாகசம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 அயோவா மாநிலத்தை சேர்ந்த நெருங்கிய தோழிகளான இருவருக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. தங்களது திருமணத்தை இருவரும் விசித்திரமாக கொண்டாட நினைத்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஒரு குன்று பகுதிக்கு தங்களது கணவர்களுடன் சென்றனர்.

அங்கு சென்ற அவர்கள் இருவரும் தங்களது திருமண ஆடையில் கணவர்களை வைத்து தீயிட்டு எரியவைத்தனர். தீ வைத்த அந்த ஆடை பற்றி எரிய தொடங்கியது.

அந்த சாகசத்தை மக்கள் சுற்றி நின்று பார்த்துக் கொண்டு இருந்தனர். பற்றி எரியும் தீயைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். 

அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றிய மேலங்கி கழன்றி விழுந்தது இருவரும் ஆனந்த கூத்தாடினர். அவர்களை சுற்றி இருந்த அனைவரும் அந்த காட்சிகளை படம் பிடித்துக் கொண்டனர். 

மூலக்கதை