வாட் வரியை குறைக்க மறுக்கும் அரசின் முடிவை எதிர்த்து டெல்லியில் இன்று பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்

தினகரன்  தினகரன்
வாட் வரியை குறைக்க மறுக்கும் அரசின் முடிவை எதிர்த்து டெல்லியில் இன்று பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்

புதுடெல்லி: வாட் வரியை குறைக்க மறுக்கும் அரசின் முடிவை எதிர்த்து டெல்லியில் இன்று பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் டெல்லியிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்கள் வாட் வரி குறைவாக உள்ள மாநிலங்களில் எரிபொருளை நிரப்புவதால் டெல்லியில் பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களில் பங்குகளில் டீசல் விற்பனை 60 சதவிகிதமும், பெட்ரோல் விற்பனை 25 சதவிகிதமும் குறைந்துள்ளதாக டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பாதிப்பை சரிகட்ட மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை டெல்லி அரசு ஏற்காததால் டெல்லியில் உள்ள சுமார் 400 பெட்ரோல் பங்குகள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இதன் விளைவாக இன்று காலை 6 மணிமுதல் நாளை அதிகாலை 5 மணிவரை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது. இதனால் கால் டாக்ஸி, ஆட்டோ ரிக்‌ஷா சேவைகள் முடங்கியுள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வரும் இந்நிலையில், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை