மேலும் பல பெண்கள் வருவதாக வந்த தகவலால் பரபரப்பு சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது: உளவுத்துறை, அதிரடிப்படை போலீஸ் குவிப்பு

தினகரன்  தினகரன்
மேலும் பல பெண்கள் வருவதாக வந்த தகவலால் பரபரப்பு சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது: உளவுத்துறை, அதிரடிப்படை போலீஸ் குவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்றதால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில்,  மேலும் பல இளம்பெண்கள் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சபரிமலையில் பதற்றம் நிலவிய வண்ணம் உள்ளது. அங்கு உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் அனை த்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் போராட்டம் வெடித்துள்ளது. இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் தொலைகாட்சி நிருபர் கவிதா, ரஹ்னா பாத்திமா ஆகிய 2 பெண்களையும் போலீசார் கவச உடை அணிவித்து சன்னிதானம் வரை அழைத்து சென்றனர். ஆனால் பக்தர்களின் எதிர்ப்பு மற்றும் தந்திரிகளின் போராட்டம் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தநிலையில்  மேலும் பல இளம்பெண்கள் சபரிமலைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களையும் தீவிர விசாரணைக்கு பின்னரே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழி முழுவதும் ஆங்காங்கே உளவுத்துறை போலீசார், கமாண்டோ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து பாஜ தலைவர் சுரேந்திரன் கூறும்போது,” சபரிமலை கோயிலுக்கு மேலும் பல இளம்பெண்கள் வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் நன்றாக தெரியும்” என்று கூறினார். இதற்கிடையே சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக மத ஒற்றுமையை சீரழிக்கும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்துகள் பகிரப்படுவதாக திருவனந்தபுரம் கமிஷனர் பிரகாஷ்ஷூக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மியூசியம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீஸ் விசாரணையில், போலீஸ் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரவி வருவது தெரியவந்தது. இதுதொடர்பாக 12 பேர் மீது மியூசியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய செல்போன் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்தந்திரிக்கு எதிர்ப்பும் ஆதரவும்: சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் கோயிலை மூடிவிடுவேன் என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தந்திரியில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதுகுறித்து, தேவசம்போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் கூறியதாவது: ‘சபரிமலை கோயிலை மூடிவிடுவேன் என்று தந்திரி கூறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். சபரிமலை கோயிலை மூட பந்தளம் அரண்மனைக்கோ, தந்திரிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. 18ம் படிக்கு அருகே மேல்சாந்தியின் உதவியாளர்கள் பூஜைகளை நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தியது சபரிமலை கோயிலுக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது’ என்று கூறினார்.மாளிகைபுரம் மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கூறியது: சபரிமலை கோயில் நடையை மூடுவேன் என்று தந்திரி கூறியதில் எந்த தவறும் இல்லை. சபரிமலை கோயில் ஆச்சாரம் மீறப்பட்டால் கோயிலை மூடுவதற்கு தந்திரிக்கு முழு உரிமை உண்டு. 18ம் படிக்கு அருகே எங்கள் உதவியாளர்கள் ேபாராட்டம் நடத்தியதில் எந்த தவறும் இல்லை. மோசமான சூழ்நிலை ஏற்படும் போது வேறு வழியில்லாமல் தான் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இந்த போராட்டத்தில் சபரிமலை கோயிலுக்கு எந்த களங்கமும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே சபரிமலையில் போராட்டம் நடத்திய பக்தர்களுக்கு தேவசம் போர்டு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இருமுடி கட்டில் ஆரஞ்சு, கொய்யா பழங்கள்சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிய ரஹ்னாபாத்திமா பம்பையில் நேற்று கூறுகையில், ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சபரிமலை வந்தாகவும், முடியாததால் தான் கொண்டுவந்த இருமுடி கட்டை அங்கே (சபரிமலையில்) விட்டு செல்வதாகவும் கூறினார். பம்பையில் ரஹ்னா விட்டு சென்ற இருமுடி கட்டை போலீசார் பரிசோதித்தனர். அதில் நெய் தேங்காய், அரிசி போன்ற பூஜை பொருட்களுக்கு பதிலாக ஆரஞ்ச் மற்றும் கொய்யா பழங்கள் இருந்தன.ேவலையை விட்டு நீக்க மிரட்டல்சபரிமலைக்கு செல்ல முயன்ற மாடலிங் அழகி ரஹ்னா பாத்திமா கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பிஎஸ்என்எல் குடியிருப்பில் தான் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இந்தநிலையில் அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற கூறி பிஎஸ்என்எல் பேஸ்புக் பக்கத்தில் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பேஸ்புக்கில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிஎஸ்என்எல் விடுத்துள்ள அறிக்கையில், அலுவலகத்திற்கு வெளியே தங்களது ஊழியரின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை