பஞ்சாப் ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்

தினமலர்  தினமலர்
பஞ்சாப் ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்

இஸ்லாமாபாத்: பஞ்சாப் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு பாக். பிரதமர் இம்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில் நின்ற மக்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் பலியாகி உள்ளனர். விபத்தில் பலியானவர்களுக்கு பாக். பிரதமர் இம்ரான்கான் டுவிட்டரில் கூறியது,

நடந்த சம்பவம் மனதுக்கு வேதனையை அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பதிவேற்றியுள்ளார்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , இந்திய தூதரகம் வாயிலாக அனுப்பிய இரங்கல் செய்தியில், ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட் , டுவிட்டரில் கூறியது, நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது. பலியானவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை