சபரிமலைக்கு வந்த பெண் திருப்பியனுப்பப்பட்டார்

தினகரன்  தினகரன்
சபரிமலைக்கு வந்த பெண் திருப்பியனுப்பப்பட்டார்

திருவனந்தபுரம் : சபரிமலை செல்வதற்காக பம்பை வந்துள்ள மஞ்சு என்பவருடன் போலீஸ் எஸ்.பி.பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர் திருப்பி அனுப்பப்பட்டார். கொல்லம் மாவட்டம் சாத்தனூரைச் சேர்ந்த மஞ்சு கேரள மகளிர் கூட்டமைப்பு தலைவர் ஆவார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்றால் பிரச்சனை ஏற்படும் என்று போலீஸ் விளக்கம் தந்தனர். ஐயப்பனின் பக்தையான தாம் தரிசனம் செய்ய வேண்டும் என்று மஞ்சு கூறினார். எனினும் போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சபரிமலைக்கு செல்லாமல் திரும்பி சென்றார் மஞ்சு.

மூலக்கதை