அதிகாரம் எங்களிடம் தான் இருக்கணும்! : தனி பணப்பட்டுவாடா அமைப்புக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
அதிகாரம் எங்களிடம் தான் இருக்கணும்! : தனி பணப்பட்டுவாடா அமைப்புக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு

மும்பை: சுதந்­தி­ர­மான பணப் பட்­டு­வாடா மற்­றும்தீர்­வு­க­ளுக்­கான அமைப்பை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்ற அரசு உயர்­மட்ட குழு­வின் பரிந்­து­ரைக்கு, ரிசர்வ் வங்கி அதி­ருப்தி தெரி­வித்­துள்­ளது.மத்­திய அரசு, நிதித் துறை சார்ந்த பணப் பட்­டு­வாடா செயல்­பா­டு­களை, சர்­வ­தேச தரத்­திற்கு உயர்த்த திட்­ட­மிட்­டுள்­ளது.
ஒழுங்குமுறை வாரியம் : இதை­யொட்டி, 2017, நிதிச் சட்­டத்­தின் கீழ், 2007ல் பணப் பட்­டு­வாடா மற்­றும் தீர்வை சட்­டப் பிரி­வில் திருத்­தம் செய்­யப்­பட்­டது. ரிசர்வ் வங்கி கவர்­னர் தலை­மை­யில், பணப் பட்­டு­வாடா ஒழுங்­கு­முறை வாரி­யம் அமைக்க, இந்த சட்ட திருத்­தம் வகை செய்­கிறது.இந்­நி­லை­யில், மத்­திய அரசு, இந்த சட்ட திருத்­தம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, மத்­திய பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள் துறை செய­லர், எஸ்.சி.கார்க் தலை­மை­யி­லான குழுவை அமைத்­தது.இக்­குழு, பல்­வேறு பரிந்­து­ரை­கள் அடங்­கிய வரைவு அறிக்­கையை, கடந்த மாதம், மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்­லி­யி­டம் வழங்­கி­யது.அந்த அறிக்­கை­யில், நிதித் துறை சார்ந்த பணப் பரி­வர்த்­த­னை­களை கண்­கா­ணிக்­க­வும், பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண­வும், தனி­யாக, பணப் பட்­டு­வாடா ஒழுங்­கு­முறை வாரி­யம் அமைக்க வேண்­டும். அதன் தலை­வரை, ரிசர்வ் வங்­கி­யு­டன் கலந்­தா­லோ­சித்து, மத்­திய அரசு நிய­மிக்க வேண்­டும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், பணப்பட்­டு­வாடா மற்­றும் தீர்­வுக்­கான வரைவு மசோ­தா­வை­யும், குழு அளித்­துள்­ளது. இதன் மூலம், நிதித் துறை­யில் போட்­டித் திறன் அதி­க­ரித்து, நுகர்­வோ­ருக்கு அதிக பாது­காப்பு கிடைக்­கும்.பணப் பரி­வர்த்­தனை செயல்­பா­டு­களில், ஸ்தி­ரத்தன்மை ஏற்­படும். எத்­த­கைய இடர்­பா­டு­க­ளுக்­கும் உட­ன­டி­யாக தீர்வு கண்டு, இயல்பு நிலையை ஏற்­ப­டுத்த முடி­யும் என, அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.
அதிகாரம் : இந்­நி­லை­யில், தன் கட்­டுப்­பாட்­டில் இருந்து, பணப் பட்­டு­வாடா சார்ந்த செயல்­பா­டு­கள் பிரிக்­கப்­ப­டு­வதை ரிசர்வ் வங்கி விரும்­ப­வில்லை.இது குறித்து, ரிசர்வ் வங்கி, உயர்­மட்­டக் குழு­வி­டம் அளித்த அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:புதிய மசோ­தாவை ரிசர்வ் வங்கி எதிர்க்­க­வில்லை. அதில், பணப் பட்­டு­வாடா நடை­மு­றையை கட்­டுப்­ப­டுத்­து­வது, மேற்­பார்­வை­யி­டு­வது உள்­ளிட்­டவை தொடர்­பான அதி­கா­ரம், ரிசர்வ் வங்­கி­யி­டமே இருக்­கும் அம்­சம் சேர்க்­கப்­பட வேண்­டும்.ரிசர்வ் வங்கி கவர்­னர் தலை­மை­யில் தான், பணப் பட்­டு­வாடா வாரி­யம் செயல்­பட வேண்­டும். ரிசர்வ் வங்­கி­யின் கீழ், பணப் பட்­டு­வாடா மற்­றும் தீர்வு நடை­மு­றை­கள் இருக்­கும்­பட்­சத்­தில், பல்­வேறு பயன்­கள் கிடைக்­கும்.இந்­தி­யா­வில்,ரிசர்வ் வங்­கி­யின் கீழ் உள்ள, பணப் பட்­டு­வாடா நடை­மு­றை­யில், திறன் குறை­வாக உள்­ளது என்­ப­தற்கு எந்தவித ஆதா­ர­மும் இல்லை. பணப்­பட்­டு­வாடா, டிஜிட்­டல் பணப் பரி­வர்த்­த­னை­களில், இந்­தியா, சிறப்­பாக முன்­னேறி வரு­வ­தற்கு, சர்வதேச அள­வில் அங்­கீ­கா­ரம் கிடைத்­துள்­ளது. அத­னால், சிறப்­பாக செயல்­படும் பிரி­வில் எவ்­வித மாற்­ற­மும் செய்ய தேவை­யில்லை. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
நம்­பிக்கை அதி­க­ரிக்­கும் : உல­க­ள­வில், வங்­கி­கள் வெளி­யி­டும், ‘டெபிட், கிரெ­டிட்’ போன்­ற­வற்­றுக்கு, இரட்டை கட்­டுப்­பாட்டு அமைப்­பு­கள் தேவை­யில்லை. இந்­தி­யா­வில், பணப்­பட்­டு­வா­டா­வில், வங்­கி­கள் தான் பிர­தா­ன­மாக உள்­ளன.அத­னால், வங்­கி­களை கண்­கா­ணிக்­கும், ரிசர்வ் வங்­கி­யின் கீழ், பணப் பட்­டு­வாடா அமைப்­பும் கொண்டு வரப்­பட வேண்­டும். ஒரே அமைப்­பின் கீழ் இருந்­தால், பணப்­பட்­டு­வாடா செயல்­பா­டு­கள் மீது, பொது­மக்­க­ளின் நம்­பிக்கை அதி­க­ரிக்­கும்.
ரிசர்வ் வங்கி அறிக்கை

மூலக்கதை