திருப்பதி உண்டியலில் ரூ.1.21 கோடி காணிக்கை

தினகரன்  தினகரன்
திருப்பதி உண்டியலில் ரூ.1.21 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணிநேரத்தில் 42 ஆயிரத்து 769 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 31 அறைகள் நிரம்பி வெளியே டிபிசி பாலம் வரை வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 20 மணி நேரத்துக்கு பின் சுவாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ₹300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் ₹1.21 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மூலக்கதை