ரசிகருக்கு வீல் சேர் வழங்கிய துல்கர் சல்மான்

தினமலர்  தினமலர்
ரசிகருக்கு வீல் சேர் வழங்கிய துல்கர் சல்மான்

கேரளாவை சேர்ந்த எம்.எஸ்.பிரவீன் என்பவர் துல்கர் சல்மானின் தீவிர ரசிகர். பெருமூளை வாதம் என்கிற நோயால் பாதிக்கப்பட்ட இவர், நீண்டநாட்களாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். மேலும் அருகில் உள்ள இடத்திற்கு கூட சென்றுவர கூட இன்னொருவர் உதவியை நாடும் நிலையில் இருந்தார்.

இவரை பற்றிய தகவல் ரசிகர் மன்றத்தின் மூலமாக துல்கர் சல்மானின் கவனத்துக்கு சென்றது. இதை தொடர்ந்து தனது சொந்த செலவில் எலெக்ட்ரானிக் வில் சேர் ஒன்றை வாங்கி, தானே நேரடியாக பிரவீனை சந்தித்து வழங்கி அவரை நெகிழச்செய்துள்ளார் துல்கர் சல்மான்.

மூலக்கதை