புதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வர் நாராயணசாமி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி: சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.   இதை நாங்கள் சும்மா விடமாட்டோம். கவர்னர் இனி திருந்துவார் என நினைக்கிறோம்.

இல்லையென்றால் புதுச்சேரி மக்கள் அவரை திருத்துவார்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் மத்திய பாஜக அரசின் ரபேல் போர் விமான ஊழலை கண்டிக்கும் பொதுக்கூட்டம் செஞ்சி சாலை திடலில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரியில் மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு கவர்னர் கிரண்பேடி என்ன செய்திருக்கிறார்? பல திட்டங்களுக்கு அவர் முட்டுக்கட்டைதான் போட்டுள்ளார்.

இதுகுறித்து பலமுறை நாங்கள் பேசிவிட்டோம். சுதேசி மில், பாரதி மில் உள்ளிட்ட மில் தொழிலாளிகளுக்கு மானியம் கொடுப்பது தொடர்பாக பட்ஜெட்டில் முடிவெடுத்து கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பினோம்.

இதில் எனக்குதான் அதிகாரம் இருக்கிறது என கூறி மானியம் கொடுக்க அனுமதி கொடுக்காமல் தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்த வழிவகுத்திருக்கிறார். காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் ஆளக்கூடாது என கூறி செயல்படும் பாஜகவுக்கு ஆதரவாக புதுவை அரசுக்கு களங்கம் விளைவிக்கிறார்.

சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். நிதி யாரெல்லாம் கொடுத்தார்கள், கான்ட்ராக்ட் விட்டது யார், என பல பதில்களை அவர் கூற வேண்டும்.

இதை நாங்கள் சும்மா விடமாட்டோம். கவர்னர் இனி திருந்துவார் என நினைக்கிறோம்.

இல்லையென்றால் புதுச்சேரி மக்கள் அவரை திருத்துவார்கள் என்றார்.

.

மூலக்கதை