சவுதி அரேபியாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
சவுதி அரேபியாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவைச் சேர்ந்த, பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டு விட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்து நேற்று, அமெரிக்க அதிபர் டொலான்டு டிரம்ப் கூறியதாவது:பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி இருக்கும்பட்சத்தில், அது மிகவும் துயரமானது. அதற்கான கடும் விளைவுகளை, சவுதி அரேபியா சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை