திலீப் - காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது
மலையாள நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சு வாரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றார்கள். அதையடுத்து திலீப், தன்னுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட, விவாகரத்து பெற்றிருந்த நடிகை காவ்யா மாதவனை, 2016 நவம்பரில் இரண்டாவதாக திருமணம் செய்தார்.
சமீபத்தில் காவ்யா மாதவனின் வளைகாப்பு நடைபெற்ற நிலையில், இன்று(அக்., 19) அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார் காவ்யா. ஏற்கனவே திலீப்பிற்கு முதல் மனைவி மூலமாக மீனாட்சி என்கிற மகள் உள்ள நிலையில், தற்போதும் மீண்டும் பெண் குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார். .
முதல் மனைவி மஞ்சு வாரியாருக்கு பிறந்த மகளான மீனாட்சி, பெற்றோரின் விவாகரத்துக்கு முன்னரே தாயை விட்டு பிரிந்து, தற்போது வரை திலீப்புடன் தான் வசித்து வருகிறார் என்பதும், மகளின் ஒப்புதலுடன் தான், காவ்யா மாதவனை திலீப் இரண்டாவதாக திருமணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..