மொபைல் போன் சேவையை திடீரென நிறுத்த தடை; தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்

தினமலர்  தினமலர்
மொபைல் போன் சேவையை திடீரென நிறுத்த தடை; தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்

புதுடில்லி : தொலை தொடர்பு நிறு­வ­னங்­கள், மொபைல் போன் சேவையை நிறுத்­து­வ­தற்கு முன், குறைந்­தது, 30 நாட்­க­ளுக்கு முன்­ன­தாக, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தும் விதி­முறை அம­லுக்கு வர உள்­ளது.

சில மாதங்­க­ளுக்கு முன், ‘ஏர்­செல்’ நிறு­வ­னம் திடீ­ரென மொபைல் போன் சேவையை நிறுத்­தி­ய­தால், கோடிக்­க­ணக்­கான வாடிக்­கை­யா­ளர்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து, தொலை தொடர்பு சேவை நிறுத்­தம் தொடர்­பான விதி­மு­றை­களை, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணை­யம் உரு­வாக்­கி­யுள்­ளது. இதற்கு, தொலை தொடர்பு ஆணை­யம், ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

ஒப்புதல் :
இது குறித்து, தொலை தொடர்பு துறை செய­லர், அருணா சுந்­த­ர­ரா­ஜன் கூறி­ய­தா­வது: தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணை­யம் அளித்த பரிந்­து­ரை­க­ளுக்கு, தொலை தொடர்பு ஆணை­யம் ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது. மொபைல் போன் சேவை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சிர­மம் ஏற்­ப­டா­மல் இருக்­க­வும், அதே­ச­ம­யம், தொழில் செய்­வதை மேலும் சுல­ப­மாக்­க­வும், புதிய விதி­மு­றை­கள் வழி வகை செய்­யும்.

ஒரு நிறு­வ­னம், தொலை தொடர்பு சேவையை நிறுத்­து­வ­தா­னால், 30 நாட்­க­ளுக்கு முன், வாடிக்­கை­யா­ள­ருக்கு தெரி­விக்க வேண்­டும். அதுவே, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணை­யம் மற்­றும் அலை­வ­ரிசை உரிம நிறு­வ­னங்­க­ளுக்கு, 60 நாட்­க­ளுக்கு முன் தெரி­விக்க வேண்­டும் என, புதிய விதி­முறை கூறு­கிறது.

ஒரு நிறு­வ­னம், குறிப்­பிட்ட தொழில்­நுட்ப சேவையை மூடும்­பட்­சத்­தில், அதன் வாடிக்­கை­யா­ளர், அதே எண்­ணில், அதே நிறு­வ­னத்­தின் வேறு சேவைக்கு மாற விண்­ணப்­பிக்க தேவை­யில்லை. எனி­னும், ஒரு நிறு­வ­னம், அனைத்து சேவை­க­ளை­யும் நிறுத்­தும்­பட்­சத்­தில், அதே மொபைல் எண்­ணில் வேறு சேவைக்கு மாற­லாம்.

உரிமம் :
ஒரு நிறு­வ­னம், அதன் தொலை தொடர்பு சேவை­களில், ஒரு பிரிவை மட்­டும் மூட விரும்­பி­னால், மொத்த சேவை­க­ளுக்­கான அலை­வ­ரிசை உரி­மத்தை திரும்ப ஒப்­ப­டைக்­கத் தேவை­யில்லை என, புதிய விதி­முறை தெரி­விக்­கிறது. இதற்­காக, உரி­மத்­தில் திருத்­தம் மட்­டும் செய்­தால் போதும். ஒரு நிறு­வ­னம், அதன் உபரி அலை­வ­ரி­சையை, வர்த்­தக நோக்­கில் வேறு ஒரு தொலை தொடர்பு சேவை நிறு­வ­னத்­திற்கு வழங்­கி­னால், அது அம­லுக்கு வரு­வ­தற்கு, 45 நாட்­க­ளுக்கு முன், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணை­யத்­தி­டம் தெரி­விக்க வேண்­டும்.

அலை­வ­ரிசை உரி­மம் முழு­வ­தை­யும் விற்­கும்­பட்­சத்­தில், அது குறித்து, 60 நாட்­க­ளுக்கு முன் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என, விதி­முறை தெரி­விக்­கிறது. இந்த இரு அம்­சங்­க­ளை­யும், முறையே, 15 நாள் மற்­றும் 21 நாள் ஆக குறைக்க வேண்­டும் என, தொலை தொடர்பு துறை வலி­யு­றுத்த உள்­ளது. தொலை­துா­ரத்­தில் உள்­ளோ­ருக்­கும், இணைய சேவை கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக, உயர் அலை­வ­ரி­சையை பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு, சலுகை வழங்­கப்­படும்.

இந்­நி­று­வ­னங்­க­ளின் அகண்ட அலை­வ­ரிசை பயன்­பாட்டு கட்­ட­ணத்தை குறைக்க, ஆணை­யம் ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது.இத­னால், தொலை தொடர்பு நிறு­வ­னங்­க­ளுக்கு, குக்­கி­ரா­மங்­க­ளுக்­கும் இணைய சேவை வழங்க வேண்­டும் என்ற ஆர்­வம் ஏற்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

கிராமங்களில் இணைய வசதி :
மத்­திய அரசு, 2019 மார்ச்­சுக்­குள், 2.50 லட்­சம் கிராம பஞ்­சா­யத்­து­களில், கண்­ணாடி நாரிழை கம்பி வடம் மூலம், இணைய வசதி ஏற்­ப­டுத்த இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. இதற்­கான, ‘பாரத்­நெட்’ திட்­டத்­தின் இரண்­டாம் கட்ட பணி­க­ளுக்கு, ஒடிசா, ஆந்­திரா உள்­ளிட்ட மாநி­லங்­கள் கோரிய கூடு­தல் தொகைக்கு, தொலை தொடர்பு ஆணை­யம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

மூலக்கதை