இலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்

தினமலர்  தினமலர்
இலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்

துபாய்:இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சனத் ஜெயசூர்யா. சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக 2013 முதல் 2017-ல் ராஜினாமா செய்யும் வரையிலும் அப்பதவியில் இருந்தார்.
இந்நிலையில் வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது. விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தல், முக்கிய ஆவணங்களை அழித்தல் போன்ற வேலைகளை செய்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் மீது ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இது குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை