கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் மூவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் மூவர் கைது செய்ப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாயிலாக தங்கம் கடத்திய இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கோடியே 60 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மாபோல, கண்டி மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.