ஒடிசாவை மிரட்டும் 'டிட்லி' புயல் : 3 லட்சம் பேர் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
ஒடிசாவை மிரட்டும் டிட்லி புயல் : 3 லட்சம் பேர் வெளியேற்றம்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று உருவான ‘டிட்லி’ புயல் ஒடிசா- ஆந்திராஇடையே கரையை கடந்தது. இதன் விளைவாக ஒடிசாவில் புயல் காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் சிகாகுளம் அருகே மிகப் பெரிய நிலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மரங்கள், மின்கம்பங்கள் வேருடன் சாய்ந்துள்ளன.இதன் காரணமாக ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சம் பேர் நேற்று இரவில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பான மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று இன்னும் சில மக்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.மேலும் ஒடிசா மற்றும் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 1000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது. மொத்தம் 836 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை