ஓரகடத்தில் செல்போன் டவர் மீது ஏறி யமஹா ஊழியர்கள் போராட்டம்
ஒரகடம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் செல்போன் டவர் மீது ஏறி யமஹா ஊழியர்கள் 20 பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிற்சாலை சுற்றளவில் 200 மீட்டர் வரை போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டம் நடத்தும் தொழிலாளர்களை அப்புறப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.