சிவகங்கையில் உள்ள மணல் குவாரியை ஆய்வு செய்து அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை: சிவகங்கை மாவட்டம் டி.புதுக்கோட்டை மணல் குவாரியை ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மணல் குவாரிக்கு செல்லும் லாரிகளால் அருகில் உள்ள பாலம் இடியும் நிலையில் உள்ளதாக, பரமக்குடி அருகே சூடியூரை சேர்ந்த மணிமாறன் தொடர்ந்த வழக்கு அக்.30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.