கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் மிரட்டல் : வெடிகுண்டுகளை வைத்து சென்றதால் பதற்றம்!

தினகரன்  தினகரன்
கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் மிரட்டல் : வெடிகுண்டுகளை வைத்து சென்றதால் பதற்றம்!

கேரளா : கேரளா மாநிலம் வயநாடு பல்கலைக்கழக வாயிலில் மாவோயிஸ்டுகள் வெடி மருந்துகளை வைத்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் உட்பட மூன்று மாவட்ட எல்லையில் கொரில்லா தாக்குதல் நடத்த உள்ளதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 3 மணியளவில் வயநாடு பல்கலைக்கழக வாயிலில் ஒரு பெண் உட்பட 3 மாவோஸ்டுகள் வந்து அறிவிப்பு பலகை மற்றும் வெடிகுண்டு ஒன்றை வைத்துவிட்டு அங்குள்ள மாணவர்கள், காவலர்களை மிரட்டி சென்றுள்ளனர். சமீபத்தில் ஆந்திராவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழகம், கர்நாடகா, கேராளாவில் கொரில்லா தாக்குதல் எனப்படும் மக்கள் ஒன்றுசேரும் இடத்தில் நடத்தும் தாக்குதலை நடத்தவுள்ளதாக மாவோயிஸ்டுகள் எச்சரித்தனர். இதனால் தமிழக-கேரள எல்லையில் சிறப்பு அதிரடி படையினர், நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார், வனக்காவலர்கள் என தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பலத்த பாதுகாப்புகள் உள்ள நிலையிலும் மாவோயிஸ்டுகள் வந்து சென்றது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு செயல் இழக்கச் செய்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எல்லைப்பகுதியில் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு முழுநேர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

மூலக்கதை