கோகைன் பயன்படுத்திய வீரர் மீது நடவடிக்கை?

தினமலர்  தினமலர்
கோகைன் பயன்படுத்திய வீரர் மீது நடவடிக்கை?

லண்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத் பிறந்தநாள் கொண்டாட்ட ராணுவ அணிவகுப்பில் தலைப்பாகை அணிந்து பங்கேற்ற முதல் சீக்கியர், போதை பொருள் சோதனையில் சிக்கியுள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், ராணி எலிசபெத் பிறந்த நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியில், முதன்முறையாக, தலைப்பாகையுடன் பங்கேற்ற பெருமைக்குரியவர், சரண்பிரீத் சிங்; சீக்கியர்.

இவர், சமீபத்தில், அரண்மனை பாதுகாப்பில் ஈடுபட்ட போது, போதைப் பொருள் உட்கொண்டதாக தகவல் வெளியானது. விசாரணையில் அது நிரூபணமாகியது. இதையடுத்து அவர், பிரிட்டன் ராணுவத்தில் இருந்து நீக்கப்படுவார் என, தெரிகிறது. சரண்பிரீத் உட்பட 3 வீரர்கள் கோகைன் பயன்படுத்தியதால் நீக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை