உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞரோடு பழகிய இளம்பெண் மீது தாக்குதல் : 3 போலீசார் பணியிடை நீக்கம்

தினகரன்  தினகரன்
உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞரோடு பழகிய இளம்பெண் மீது தாக்குதல் : 3 போலீசார் பணியிடை நீக்கம்

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞரோடு ஏன் பழகினாய் என கேட்டு இளம்பெண் ஒருவரை போலீஸார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகர போலீஸார் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவரை, பெண் போலீஸார் உள்பட 3 போலீஸார் அடித்து ஜீப்பில் ஏற்றிச் செல்வதுடன், நீ இந்துவாக இருந்துகொண்டு ஒரு இஸ்லாமிய இளைஞரோடு ஏன் பழகினாய் என கேட்டு தாக்குகின்றனர்.மீரட் மருத்துவக் கல்லூரி அருகே அப்பெண்ணும், இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட சில அமைப்பினர் இருவரையும் தாக்கி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் இருவரையும் தனித்தனி வாகனங்களில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து உத்தரப் பிரதேச போலீஸாருக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், மீரட் நகர காவல்துறை சூப்பிரண்ட் ரண்விஜய் சிங், அந்த வீடியோவில் இருந்த மூன்று போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

மூலக்கதை