ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி டிராவில் முடிந்தது

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா  ஆப்கானிஸ்தான் போட்டி டிராவில் முடிந்தது

துபாய்: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 5-வது போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 253 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.தொடர்ந்து ஆடிய இந்திய அணி  49.5 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியை சமன் செய்தது. கடைசி 2 பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தை தூக்கியடிக்க அதை ஆப்கானிஸ்தான் வீரர் கேட்ச் பிடித்தார். இதனால் பரபரப்பான த்ரில் கட்டத்தில் ஆட்டம் சமனில் முடிந்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மூலக்கதை