டோனி 200

தினகரன்  தினகரன்
டோனி 200

இந்திய கிரிக்கெட் அணிக்கு 200 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமை விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனிக்கு கிடைத்துள்ளது. கடைசியாக 2016 அக்டோபர் 29ல் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் கேப்டனாக இருந்த அவர், 696 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் தலைமை பொறுப்பேற்றார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 4 சுற்று போட்டியில் கேப்டன் ரோகித்துக்கு ஓய்வளிக்கப்பட்டதால் டோனிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அவரது தலைமையில் விளையாடிய 199 போட்டியில் இந்தியா 110 வெற்றி, 74 தோல்வி கண்டுள்ளது (4 டை, 11 போட்டிகளில் முடிவு இல்லை).

மூலக்கதை