வெங்கடேஷ் பண்ணையார் நினைவுதினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றுமுதல் 144 தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெங்கடேஷ் பண்ணையார் நினைவுதினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றுமுதல் 144 தடை

தூத்துக்குடி: கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூர் தாலுகா, அம்மன்புரத்தில் மறைந்த வெங்கடேஷ் பண்ணையாரின் 15வது நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (27ம்தேதி) காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144வது பிரிவின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு காலங்களில் பொதுமக்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும், வாள், கத்தி, கம்பு, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக நினைவு தினத்திற்கு கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 144 வது பிரிவின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. தடை உத்தரவு நாள்களில் அமைதியை நிலைநாட்ட மாவட்ட காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினங்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருந்தால் எஸ்பியை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

.

மூலக்கதை