பாமக சார்பில் செங்கல்பட்டில் விழிப்புணர்வு பிரசாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாமக சார்பில் செங்கல்பட்டில் விழிப்புணர்வு பிரசாரம்

செங்கல்பட்டு: பாமக சார்பில், பாலாற்றை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் செங்கல்பட்டில் நடந்தது. இதில் அன்புமணி பேசினார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட பாமக சார்பில் ‘பாலாற்றை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் செங்கல்பட்டில் நடந்தது. மாநில துணை பொதுசெயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் கணேசமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் சக்கரபாணி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் வாசு முன்னிலை வகித்தனர்.

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து, ‘பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும், தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலாறு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜி. கே. மணி முன்னாள் மத்திய அமைச்சர் ஏ. கே. மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் சதாசிவம், பசுமை தாயகம் பொறுப்பாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை