கும்மிடிப்பூண்டி அருகே 44 கிலோ கஞ்சா பொட்டலம் பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கும்மிடிப்பூண்டி அருகே 44 கிலோ கஞ்சா பொட்டலம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில்  கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்த 2 பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 44 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த  எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி  உள்ளது. இதனருகில் இன்று அதிகாலை ஆரம்பாக்கம் எஸ்ஐ ஜெயபிரகாஷ் தலைமையில்  போலீசார் வழக்கமான  வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.   அப்போது,  நெல்லூரில் இருந்து சென்னை வந்த  அரசு பேருந்தை மடக்கி சோதனை நடத்தினர்.   பஸ்சில் வந்த 2 பெண்கள், ஒரு வாலிபர் திருதிருவென முழித்துகொண்டிருந்தனர்.   இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சீட்டுக்கு கீழ்  பார்த்தபோது 3 பைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.   அதை திறந்து பார்த்தபோது 24  பொட்டலங்களில் 44 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பின்னர், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.    போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தது தஞ்சாவூரை சேர்ந்த  சரோஜா (45), இவரது மகன் ராஜி (20), மதுரையை சேர்ந்த பாண்டியம்மாள் (38) என்பது தெரியவந்தது.

பிடிபட்டவர்களை திருவள்ளூர் காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராவிடம் ஒப்படைத்தனர்.   இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும்  போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

அரசு பஸ்சில்  கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வரப்பட்டு போலீசாரிடம்  சிக்கிய சம்பவம்  எளாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

.

மூலக்கதை