இளம் பெண்ணை துன்புறுத்தல் செய்த நபருக்கு - புதிய சட்டத்தின் கீழ் உடனடியாக சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
இளம் பெண்ணை துன்புறுத்தல் செய்த நபருக்கு  புதிய சட்டத்தின் கீழ் உடனடியாக சிறை!!

கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவருக்கு உடனடியாக தண்டப்பணமும், சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 
 
கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இந்த சட்டம் பிரான்சில் நடைமுறையில் உள்ளது. பொது போக்குவரத்துக்களில், வீதிகளில் பாலின துன்புறுத்தல்கள் வன்முறையில் ஈடுபட்டால் உடனடியாக குற்றப்பணமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் முப்பது வயதுடைய நபர் ஒருவர் Draveil நகரில் வைத்து பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பெண்ணிடம் ஆபாச வார்த்தைகளையும் பேசியுள்ளார். 
 
உடனடியாக கைது செய்யபட்ட அவர், மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் Evry குற்றவிய நீதிமன்றத்தில் வைத்து €300 தண்டப்பணம் செலுத்தியதுடன், அவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை நீதிமன்றம் மூடப்பட்டிருந்ததால் மறுநாள் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் இல்லையென்றால் அன்றே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

மூலக்கதை