கன்னியாகுமரி அருகே இளைஞர் காணாமல் போன வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரி அருகே இளைஞர் காணாமல் போன வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம்

மதுரை: கன்னியாகுமரியில் கடந்த 2014ல் கிளட்சன் என்பவர் காணாமல் போனதாக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உததரவிட்டது. தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி உமா என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு அளித்தார். தன் உறவினர் வீட்டிற்கு சென்ற கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை என மனுவில் புகார் தெரிவித்திருந்தார்.

மூலக்கதை