பரிஸ் - மெற்றோ சுரங்க வாயிலுக்குள் மூன்றாவது தடவையாக சிக்கிக்கொண்ட மகிழுந்து!!

PARIS TAMIL  PARIS TAMIL

நேற்று திங்கட்கிழமை மகிழுந்து ஒன்று மெற்றோ நிலைய சுரங்க வாயிலுக்குள் சிக்கிக்கொண்டது. வேகமாக வந்த மகிழுந்து கட்டுப்பாடு இன்றி நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள Chaussée d'Antin-La Fayette மெற்றோ நிலைய சுரங்கத்துக்குள்ளேயே இவ்மகிழுந்து சிக்கிக்கொண்டது. மாலை 7 மணி அளவில், வீதியில் சென்றுகொண்டிருந்த குறித்த மகிழுந்தின் சாரதி, நிலகீழ் மகிழுந்து தரிப்பிடத்துக்குள் நுழைவதாக நினைத்துக்கொண்டு மகிழுந்தை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் உள்ளே படிக்கட்டுக்கள் இருப்பதை பார்த்து சுதாகரித்து மகிழுந்தை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால் அதற்குள்ளாக மகிழுந்தின் முன் இரண்டு சக்கரங்களும் சுரங்கத்துக்குள் இறங்கிவிட்டன. 
 
சாரதி இதுபோல் செய்வது இது முதல் தடவை அல்ல. முன்னதாக 2012 ஆம் ஆண்டு இதே நிலையத்தின் சுரங்கத்துக்குள் மகிழுந்தை இறக்கியிருந்தார். அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டில், பரிசின்  19 ஆம் வட்டாரத்தில் உள்ள Corentin-Cariou நிலைய சுரங்கத்துக்குள்ளும் மகிழுந்தை இறக்கியிருந்தார். இச்சம்பவங்களின் போது யாரும் காயமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை