பேஸ்புக் நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு?....... இன்ஸ்டாகிராமை நிறுவியவர்கள் பதவி விலகல்

தினகரன்  தினகரன்
பேஸ்புக் நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு?....... இன்ஸ்டாகிராமை நிறுவியவர்கள் பதவி விலகல்

நியூயார்க்: இன்ஸ்டாகிராமை நிறுவிய இரண்டு அதிகாரிகள் பதவி விலகியுள்ளார். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துகொள்வதற்கான இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் 2010-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கெவின் சிஸ்ட்ரோம், மைக் கிரைக்கர் ஆகியோர் இன்ஸ்டாகிராமை நிறுவினர். கெவின் சிஸ்ட்ரோம் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், மைக் கிரைக்கர் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் தங்கள் வகித்து வரும் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அடுத்த அத்தியாயத்தை தொடங்க ஆயத்தமாகிவிட்டதாக சிஸ்ட்ரோம் வலைப்பதிவிட்டுள்ளார். இவர்கள் பதவி விலகுவதற்கு இன்ஸ்டாகிராமை கையகப்படுத்தி வைத்த பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் உடனான கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மூலக்கதை