இந்தியன் வங்கி சி.இ.ஓ.,வாக பத்மஜா சந்துரு நியமனம்

தினமலர்  தினமலர்
இந்தியன் வங்கி சி.இ.ஓ.,வாக பத்மஜா சந்துரு நியமனம்

புதுடில்லி : சென்­னையை தலை­மை­யி­ட­மாக கொண்டு செயல்­படும், இந்­தி­யன் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் சி.இ.ஓ., எனப்­படும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக, பத்­மஜா சந்­துரு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

ஆந்­திர பல்­க­லை­யில் பட்­டம் பயின்ற இவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வில், 30 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வில், சர்­வ­தேச சந்தை பிரி­வின், துணை நிர்­வாக இயக்­கு­ன­ரான இவர், உட­ன­டி­யாக, இந்­தி­யன் வங்­கி­யில் பொறுப்­பேற்­பார் என, மத்­திய அரசு அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சமீ­பத்­தில், பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வைக் குழு, 10 பொதுத் துறை வங்­கி­களில், புதிய நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் அதி­கா­ரி­கள் நிய­ம­னத்­திற்கு ஒப்­பு­தல் அளித்­தது. அதில், பத்­மஜா சந்­துரு மற்­றும் அவ­ரு­டன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வில், துணை நிர்­வாக இயக்­கு­ன­ராக பணி­யாற்­றிய, மிருத்­யுன்­ஜய் மகா­பத்­ரா­வும் இடம் பெற்­றி­ருந்­த­னர். மிருத்­யுன்­ஜய் மகா­பத்ரா, சிண்­டி­கேட் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

மூலக்கதை