கச்சா எண்ணெய் அளவை உயர்த்த முடியாது; சவுதி அரேபியா திட்டவட்டம்
அல்ஜியர்ஸ் : கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை உடனடியாக உயர்த்த முடியாது என சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
சில தினங்களுக்கு முன்பு எண்ணெய் வளநாடுகள் உடனடியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்திருந்தார். அல்ஜிரிய தலைநகர் அல்ஜியர்சில் நடைபெற்ற எண்ணெய் வள நாடுகள் கூட்டத்தின் முடிவில், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் போக்கு திருப்திகரமாக இருந்து வருவதால் அதன் உற்பத்தியை உடனடியாக உயர்த்த முடியாது.
எதிர்காலத்தில் உயர்த்துவதற்கான வாய்ப்பு உண்டு என அரேபியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு எண்ணெய் வள நாடுகள் பணிந்துவிடக் கூடாது என ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.