இமாச்சலம் சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்ப முடியாமல் தவிப்பு
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒசூரைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள், திருச்சியைச் சேர்ந்த 40 மாணவர்கள் இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்கு பலத்த மழை பெய்து வருவதால் விடுதி விட்டு வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.