€500,000 செலவில் எலிசே மாளிகையில் திருத்தப்பணிகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
€500,000 செலவில் எலிசே மாளிகையில் திருத்தப்பணிகள்!!

எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
1889 ஆம் ஆண்டில் இருந்து ஜனாதிபதி மாளிகையான எலிசேயில், பல வரலாற்று தருணங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டு உள்ளன. பல முக்கிய சந்திப்புக்கள், விருந்துபசாரம், கொண்டாட்டங்கள் என பல நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளன. தற்போது ஐந்தாவது குடியரசு ஆட்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வருடத்துக்கு 160 இல் இருந்து 200 தடவைகள் வரை, நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. தற்போது,  விருந்துபசாரம் இடம்பெறும் நீளமான அரங்கு ஒன்றின் உள்ளக வடிவமைப்பை முற்றாக மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக அரசு தரப்பில் €500,000 க்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு வாரங்களுக்கு எலிசே மாளிகையின் குறித்த பகுதி மூடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14 ஆம் திகதி முதல் இந்த திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை