Lagny-sur-Marne : வாகனத்தை இடைநிறுத்தி கொள்ளை! - பணப்பெட்டிகள் திருட்டு!!
இன்று திங்கட்கிழமை Lagny-sur-Marne பகுதியில் பணம் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று கொள்ளையிடப்படுள்ளது. கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காலை 10.50 மணி அளவில், Loomis நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் பணம் வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டது. அவர்களை வழி மறித்த நால்வர் கொண்ட குழு, அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பணப்பெட்டிகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் சாம்பல் நிற Mercedes மகிழுந்தில் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் போது இரண்டு இடங்களில் விபத்தை ஏற்படுத்திச் சென்றதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கொள்ளையர்களை தேடிவரும் காவல்துறையினர் முதல்கட்டமாக அவர்கள் பயன்படுத்திய மகிழுந்தை கைப்பற்றியுள்ளனர். கொள்ளையர்களை உலங்குவானூர்தி மூலம் தேடி வருகின்றனர்.