மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கக்கூடாது: உயர்நீதிமன்ற கிளை
மதுரை: மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் திருட்டில் பறிமுதல் செய்யும் வாகனங்களுக்கு அபராதம் கட்டினாலும் அதை விடுவிக்கக்கூடாது என்று பாண்டியராமன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.