10 கோடி ஏழைகள் பயன்பெறும் ' ஆயுஷ்மான் பாரத்' இலவச மருத்துவ சிகிச்சை! பிரதமர் தொடங்கி வைத்தார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
10 கோடி ஏழைகள் பயன்பெறும்  ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ சிகிச்சை! பிரதமர் தொடங்கி வைத்தார்!

 

நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பத்தை  சேர்ந்த 50 கோடி பேர் சிகிச்சை பெறும் வகையில் 'ஆயுஷ்மான் பாரத்' எனும்  திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.   ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா அபியான்’  என்ற பெயரிலும் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களும், நகர்புறத்தை சேர்ந்த 2.33 கோடி குடும்பங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  சமூக பொருளாதார  கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த திட்டத்தில் 10.36  கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏழு வகையான பிரிவு அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.  நகர்ப்புறங்களில் 11 வகையாக இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 வகையில் துப்புரவு தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சித்தாள்கள், கூலித்தொழிலாளர்கள், தினக்கூலிகள்,  காவலாளிகள், தலைச் சுமை தொழிலாளர்கள் போன்ற குறைந்த வருவாய்ப் பிரிவினர் இணைக்கப்பட்டு உள்ளனர். ஒரு குடும்பத்தில் எத்தனை பேர்  இருந்தாலும் அத்தனை பேரும் அதில் இணைக்கப்பட்டுள்ளனர்.  இத்திட்டத்தின் மூலம் 1,354 வகையான மருத்துவ சிகிச்சை பெறலாம். இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துவிட்டன.  இந்த திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பத்தை  சேர்ந்த 50 கோடி பேர் சிகிச்சை பெறும் வகையில் 'ஆயுஷ்மான் பாரத்' எனும்  திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 
 ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா அபியான்’  என்ற பெயரிலும் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களும், நகர்புறத்தை சேர்ந்த 2.33 கோடி குடும்பங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
சமூக பொருளாதார  கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த திட்டத்தில் 10.36  கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏழு வகையான பிரிவு அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். 
நகர்ப்புறங்களில் 11 வகையாக இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 வகையில் துப்புரவு தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சித்தாள்கள், கூலித்தொழிலாளர்கள், தினக்கூலிகள்,  காவலாளிகள், தலைச் சுமை தொழிலாளர்கள் போன்ற குறைந்த வருவாய்ப் பிரிவினர் இணைக்கப்பட்டு உள்ளனர். ஒரு குடும்பத்தில் எத்தனை பேர்  இருந்தாலும் அத்தனை பேரும் அதில் இணைக்கப்பட்டுள்ளனர். 
இத்திட்டத்தின் மூலம் 1,354 வகையான மருத்துவ சிகிச்சை பெறலாம். இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துவிட்டன. 
இந்த திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

 

மூலக்கதை