டென்மார்க் விலங்கியல் பூங்காவில் யானைகள் பகுதியில் குதித்த இளைஞர்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

தினகரன்  தினகரன்
டென்மார்க் விலங்கியல் பூங்காவில் யானைகள் பகுதியில் குதித்த இளைஞர்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

டென்மார்க்: டென்மார்க் நாட்டில் விலங்கியல் பூங்காவில் யானைகள் பகுதியில் குதித்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். கோபன்ஹான் உயிரியல் பூங்காவில் ஆசிய யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றது. இங்கு திடீரென இளைஞர் ஒருவர் யானைகள் இருக்கும் குதித்து அவைகளை நோக்கி சென்றார். இதனை கண்ட யானைகள் அவரை தாக்க முயன்றனர். பின்னர் குழப்பம் அடைந்த யானைகள் தங்கள் குட்டியை பாதுகாக்க முயன்றனர். இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திய இளைஞர் மற்றோரு வழியாக வெளியே சென்றார். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை