மாலத்தீவு அதிபர் தேர்தலில் இப்ராஹிம் முஹமது சோலிஹ் வெற்றி

தினகரன்  தினகரன்
மாலத்தீவு அதிபர் தேர்தலில் இப்ராஹிம் முஹமது சோலிஹ் வெற்றி

மாலே: மாலத்தீவு புதிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முஹமது சோலிஹ் வெற்றி பெற்றுள்ளார். 58.3 சதவீத வாக்குகள் பெற்று  ஆட்சியை பிடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய அதிபர் அப்துல்லா யமீனை தோல்வியடைந்துள்ளார். தெற்காசிய நாடான மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமீன் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் ஆளும் கட்சியான மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபர் யாமீனும், எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமதுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 92 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஓட்டுப்பதிவு நிறைவடைந்தபின் ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்றது.இதில் எதிர்கட்சியின் இப்ராகிம் முகமது 58.3 சதவிகித ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்ராகிம் முகமது 1,33,808 ஓட்டுகளும், யாமீன் 95,526 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். மேலும் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அப்துல்லா யமீன் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை