இங்கிலாந்தில் கால்வாயில் மீன்பிடிக்க சென்ற போது சிக்கிய ஆயுதங்கள்.... போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
இங்கிலாந்தில் கால்வாயில் மீன்பிடிக்க சென்ற போது சிக்கிய ஆயுதங்கள்.... போலீசார் விசாரணை

இங்கிலாந்து: இங்கிலாந்தில் கால்வாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது. ஷெல்டன்ஹாம் என்ற இடத்தில் உள்ள கால்வாயில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்தினருடன் மீன்பிடிக்கச் சென்றார். அப்போது அவரது தூண்டிலில் பை ஒன்று சிக்கியது. அதனைத் திறந்து பார்த்த போது அதில் கைத்துப்பாக்கிகள், வெடி மருந்துகள், பம்ப் ஆக்சன் துப்பாக்கி போன்றவை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆயுதங்களைக் கைப்பற்றி, பையின் உரிமையாளர் யார்? எதற்கு இங்கு கொண்டுவரப்பட்டது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை